ஞாயிறு, 4 அக்டோபர், 2009

காதல் ஹைக்கூ...


பன்னீரின் மனமும் தோற்றது
ஜவ்வாதும் வெறுப்பேற்றியது
அருகில் என்னவள் இருந்ததால்...



ரோஜாவே
ரோஜாவை பறிக்கும்
அதிசயம் கண்டேன்;
ஆம்...
ரோஜாப்பூவை பறித்தாள்
என்னை கவர்ந்த அவள்!







அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;
நீ காபி குடித்த டம்ளரை
அது எச்சில்படுத்தியபோது...







இறைவன் தோன்றினால்
ஒரு வரம் தான் கேட்பேன்;
உன் கொலுசாய் நான் மாற...
ஏன்...?
நீ கேட்கலாம்;
உன் இதயத்தை
நான் திருடியது தெரியாமல்
இன்னொருவனுக்கு நீ
மாலையிட்டு விட்டாயே...!







நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;
உன்னை கண்ட நாள் முதல்
இரவும் பகலாகிப் போனதால்...







நீ பூமி
நான் சந்திரன்
உன்னை
சுற்றி சுற்றியே வருகிறேன்;
சந்திக்க முடியாது
என்று தெரிந்தும்...



நம் கண்கள் மோதியபோது
ஒவ்வொரு நொடியும் இனித்தன;
அதே ஒவ்வொரு நொடியும்
இப்போது வலிக்கிறது;
நீ
இன்னொருவனுடன்
கை கோர்த்தபோது...!







புளுட்டோனியத்தைவிட
உன் பார்வைக்கு பவர் அதிகம்
ஒத்துக் கொள்கிறேன்;
உனது ஒரு பார்வையிலேயே
என் இதயம் நொறுங்கிவிட்டதே...







இரவும் சுடும்
இப்போது உணர்ந்தேன்;
உனது கோபத்தை
முதன்முதலாய் பார்த்தபோது...







திடீர் விபத்து
ஆனால்
இன்ப அதிர்ச்சி!
இங்கே மோதியது
நீயும், நானும் அல்லவா?







தேனைவிட இனியபொருள்
உண்டென்று உணர்ந்தேன்
உன் எச்சிலை
என் இதழ்
முதன் முதலாக ஈரப்படுத்தியபோது...

ஆக்கம் : கவிஞர் நெல்லை விவேகநந்தா
Share:

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

kavithai supper....

- uma ananthi, chennai

piravina சொன்னது…

கவிதை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
அன்புடன்...
பிரவீனா