செவ்வாய், 17 மே, 2011

கண்டதும் காதல் நிஜமா?

ப்போதெல்லாம் நம் இளைஞர் - இளைஞிகளிடம் கண்டதும் பச்செக்கென்று காதல் ஒட்டிக்கொண்டு விடுகிறது. பீச்சிலோ, பஸ் ஸ்டாப்பிலோ ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால் அவள் பின்னாடியே போய்விடும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன்... நம் தமிழ் காதல் சினிமாக்களும் இத்தகைய ஒரு படிப்பனையே பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன.


ஆராய்ச்சி
யாளர்களிடம், கண்டதும் காதல் கொள்வது என்பது உண்மையா? ன்று கேட்டால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அப்படியென்றால், அழகான ஒரு இளம்பெண்ணை கண்ட மாத்திரத்தில் ஒருவித கிறக்கம் ஒரு இளைஞனிடம் ஏற்படுகிறதே... அதன்பெயர் காதல் இல்லையா? என்று விரிவாக கேட்டால், அதுபற்றி பெரிய விளக்கமே கொடுக்கிறார்கள்.


ஒரு இளம் ஆண் அழகான இளம்பெண்ணை பார்க்கும்போதோ அல்லது ஒரு அழகான இளம்பெண் அழகான வாலிபன் ஒருவனைக் காணும்போதோ அவர்களது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று உணர்கிறார்கள். பெக் அடிக்காமலேயே ஒருவித கிக் நிலைக்கு ஆளாகிறார்கள்.


நிச்சயமாக இதற்கு பெயர் காதலே இல்லை. காமம்தான். ஆம்... தன் மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறையாகப் பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி காம மட்டுமே என்கிறார் லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர் டான்மாய் சர்மா.


இவர், கண்டதும் காதல் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்துள்ளார். 18 முதல் 50 வயது வரையிலான 80 பேர் இவரது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் ஆண், பெண்களை அருகருகே நெருக்கமாக அமர வைத்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்களிடம் பலவித உணர்ச்சிகள் கொந்தளித்தன.


தனக்கு முன்னால் லோ நெக்கில் அமர்ந்திருந்த இளம்பெண்களைப் பார்த்த ஆண்களுக்கு அந்த பீலிங்கின் வேகம் தாறுமாறாக இருந்தது. ஒருசிலர் எதிர் பாலினரை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அசையாமல் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிந்தனர்.

சிறிதுநேரத்திற்கு பிறகு எதிர்பாலினரை பார்க்கும்போது எத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள் என்பது பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


அப்போது பெரும்பாலானவர்கள், தனது அருகே இருந்த எதிர்பாலினர் மீது காமம் கொண்டதாக தெரிவித்தனர். ஒருசிலர், அடுத்த நிமிடமே தனக்கு எதிராக இருந்த எதிர்பாலினருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மோகம் ஏற்பட்டதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டனர்.


தொடர்ந்து, டாக்டர் டான்மாய் சர்மாவின் ஆய்வு வேறு மாதிரியாக இருந்தது.     மூலம் ஆய்வு செய்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


ஆய்வின் முடிவு குறித்து அவர் கூறியதாவது :


 இந்த ஆராய்ச்சி மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும், பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் காம  உணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமான அளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இந்த உணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்று தெரிவித்தார்.

Share: