சனி, 23 ஏப்ரல், 2011

சாய்பாபாவின் சரித்திரம்


க்களை நல்வழிப்படுத்த மகான்கள் அவ்வபோது அவதரிப்பார்கள். அந்த வகையில், அவதாரம் எடுத்தவர் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா.

சாய்பாபாவின் சரித்திரம்: 


சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். 


தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, "என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். 

அதற்கு சாய்பாபா, "நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: 


பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு ¬முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.
* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.
* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...
* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்த வங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
Share:

விபரீத 'ஆசை' தந்த மன பாதிப்பு


டலுக்குள்ளும், மனதுக்குள்ளும் இளம்பருவம் நிகழ்த்தும் மாயாஜாலத்தின் விளைவால் ஆணும், பெண்ணும் உடலால்-உள்ளத்தால் பின்னிப்பிணைந்து புதிய உயிரின் தேடலுக்கோ அல்லது உடலுக்கும், உள்ளத்துக்குமான திருப்திக்கோ ஈடுபடும் பிணைப்புதான் செக்ஸ்.

அந்த புனித உறவில் கணவன்-மனைவியருக்குள் ஆத்மார்த்த திருப்தி, மனங்களை ஆழமாக தொட்ட புரிதல் இருக்க வேண்டும். அங்கேதான் செக்ஸ் புனிதம் பெறுகிறது.

ஆனால், இன்று எத்தனைபேர் ஒருவரையருவர் புரிந்துகொண்டு செக்ஸில் ஈடுபடுகிறார்கள்?

இந்த பட்டியலில் வந்து சேர்வோர் குறைவு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏதோ ஒரு திருப்திக்காக துணையுடன் இணையும் இவர்கள், அந்த புனித பந்தம் பற்றி கடைசி வரையில் தெரியாமலேயே போய்விடுகிறார்கள். தங்களது வருங்கால சந்ததியினருக்கும் அதை அறிவுறுத்த மறந்து விடுகிறார்கள்.

தம்பதியர் தங்களுக்குள் மனம் விட்டு பேசினாலே செக்சைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு எத்தனைபேர்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்? பெரும்பாலும், அவர்களுக்குள் எட்டிப்பார்க்கும் ஈகோ அதை தடுத்து விடுகிறது.

துணையின் மனதையும், ஏக்கங்களையும் புரிந்து கொள்ளாதவர்கள் தவறான வழிக்காட்டலில் பயணித்து, குற்ற உணர்வுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஐரோப்பிய இளைஞர்கள் செக்ஸ் விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள் என்கிற கோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கிறது.

அங்குள்ள இளம் வயதினர் தங்களது செக்ஸ் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. மேற்படி மது, போதை பொருளால்தான் தங்கள் அந்த உறவில் முழு திருப்தி அடைய முடியும் என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதுதான் இதற்கு காரணம்.

"உங்கள் கணிப்புபடி நீங்கள் மது, போதை பொருள்களால் செக்ஸ் உறவில் திருப்தி அடைகிறீர்களா?" என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வியை கேட்டு, தகவல்களை சேகரித்தார்கள். அதற்கு பதிலளித்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரும், பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரும் அதற்கு ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.

இந்த விபரீத தேடலால், ஐரோப்பிய இளம் வயதினர் பாதுகாப்பற்ற உறவு வைத்துக்கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று தங்களது ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், இந்த காரணத்தால் அவர்கள் பாலியல் நோய்க்கும் ஆளாகின்றனர் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பாவில் மட்டுமல்ல; பல்வேறு நாட்டினரிடமும் இந்த தவறான எண்ணம் பரவி காணப்படுவது, இந்த சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

இங்கிலாந்தில் 30 சதவீதம் பேரும், இத்தாலியில் 36 சதவீதம் பேரும், ஸ்பெயினில் 37 சதவீதம் பேரும், ஆஸ்திரியாவில் 50 சதவீதம் பேரும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்கு முன்பாக மது அருந்துகிறார்களாம்.

இந்த விபரீத போதை உறவில் ஈடுபடுவோர் கூறும்போது, வெட்க உணர்வை மறந்து, புதிய வகையில் உறவு கொள்ளவே தாங்கள் அதை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

"இந்த பழக்கம் தவறான ஒன்று. ஆரம்பத்தில் திருப்தி தருவதாக தோன்றினாலும், போகப்போக உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்" என்று எச்சரிக்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் இந்த விபரீத ஆசைகள் நம் இந்தியர்களையும் தற்போது தொற்றிக்கொண்டுள்ளது. மது, போதைகளில் அடிக்கடி திளைப்பவர்கள் இந்த ஆசையை விரும்புகிறார்களாம்.

அதற்கு இந்த அமுதாவையே உதாரணமாக கூறலாம்.

ஒருநாள் அவளது கணவன் அவளிடம் தனது விபரீத ஆசையை கூறினான்.
'பீர் குடித்துவிட்டு செக்ஸ் உறவில் ஈடுபட்டால் முழு திருப்தி கிடைக்கும் என்று என் நண்பன் கூறினான். அதற்கு நீ ஒத்துக்கொள்வாயா?' என்று கேட்டான்.

அவளும் ஒருநாள்தானே என்று அனுமதி கொடுத்தாள். அன்று அவர்களுக்குள் நிகழ்ந்த உறவில் வித்தியாசமான இன்பத்தை அமுதா உணர்ந்தாள். அவளுக்கு அந்த இன்பம் அடிக்கடி வேண்டும் என்பதுபோல் இருந்தது.

மறுநாளும் பீர் வாங்கி வருமாறு கணவனிடம் கூறினாள். அன்றைய உறவிலும் அவளுக்கு வித்தியாசமான இன்பம்-அனுபவம் கிடைத்தது.

ஒருகட்டத்தில் அந்த இன்பத்திற்கு அவள் அடிமையே ஆகிவிட்டாள். கணவன் பீர் பாட்டில் வாங்கி வராவிட்டால், இவளே பக்கத்து வீட்டு பையனிடம் பணத்தை கொடுத்து, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதை வாங்கி வரச் செய்தாள்.

இதன்விளைவு... வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பீரை கையில் எடுத்த அமுதாவின் கணவன், அந்த மதுவுக்கு நிரந்தர அடிமை ஆகிவிட்டான். அமுதாவும் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகிவிட்டாள்.

உண்மையைச் சொல்லப் போனால் திருப்தியான செக்ஸ் உறவுக்கு மனம் விட்டு பேசுவதே சிறந்த மருந்து. அதுதான் செலவு இல்லாத, பின்விளைவுகளை ஏற்படுத்தாத அற்புத மருந்து.

உங்கள் மனதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் மனம் அழகானதாக இருந்தால் செக்ஸ் என்கிற அந்த புனித உறவும் அழகானதாக இருக்கும்.

அதற்கு என்ன செய்யலாம்?


* மேலே அதிகமாக குறிப்பிட்டதுபோல் மனம்விட்டு பேசுங்கள். அது எப்போதும் உங்களுக்குள் நிகழட்டும். மனதிற்குள், துணை பற்றிய ஏதோ ஒரு கருத்தை புதைத்துக்கொண்டு, அவரை உறவுக்கு அழைக்காதீர்கள்.

* எப்போதுமே உங்களை அழகாக உணருங்கள். நான் அழகாக இருக்கிறேன் என்று எப்போதும் நினைத்திருங்கள். உங்கள் மனம்-எண்ணங்கள் அழகாக இருந்தால்தான் நீங்கள் உடல் அளவிலும் அழகாக இருக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
* ஆடை விஷயத்திலும் அழகாக இருங்கள். கணவர் வீட்டுக்கு வரும்போது புதிய ஆடையில் இல்லாவிட்டாலும் சுத்தமான-தூய்மையான ஆடையில் இருங்கள். முகத்தில் புத்துணர்வும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். அப்போதுதான், உங்களை பார்த்த மாத்திரத்தில் உங்கள் கணவருக்கு உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் இருந்து உங்கள் கணவர் டென்ஷனாக வந்தாலும், உங்கள் மலர்ச்சியைப் பார்த்து அவரும் மகிழ்ந்து போவார்.
* உள்ளாடை விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்துங்கள். அதெல்லாம் தேவையற்ற விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். கிழிந்துபோன உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள்.
* நீங்களும், உங்களவரும் தனிமையில் இருக்கும்போது வெளிப்படையாக இருங்கள். அந்தநேரம் நீங்கள் செக்ஸியாக ஆடை அணிந்திருப்பதிலும் தவறில்லை. செக்ஸியாக உங்களைக் காட்டிக் கொள்வதிலும் தவறில்லை.

* உங்கள் துணைக்கு எங்கே தொட்டால், முத்தமிட்டால் பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருங்கள். அந்த இடங்களில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்துங்கள். உங்கள் மனம் இலவம் பஞ்சாய் பறக்கும்.
* செக்ஸ் விஷயத்தில் துணையின் எதிர்பார்ப்புகளை-விருப்பங்களை தவறாமல் கேளுங்கள். அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால், முயற்சியாவது செய்யுங்கள்.
* சுவிட்ச் போட்டவுடன் இயங்கும் இயந்திரம்போல் வேகமாக இயங்கி, வேகமாக இன்பத்தை முடித்துக் கொள்ளாதீர்கள். தேனை மொத்தமாக குடித்தால் பின்விளைவுகள் வேறுமாதிரியாகிவிடும். அதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடிக்க வேண்டும். இன்பமும் அப்படித்தான். அதை சிறிது சிறிதாகத்தான் அனுபவிக்க வேண்டும்.
* உறவுக்கு முன் துணையை கொஞ்சி மகிழுங்கள். வீணையை மீட்டுவதுபோல் ஆங்காங்கே மீட்டி கிளுகிளுப்பாக்குங்கள்.
* ஈகோ உணர்வு உங்களுக்குள் ஒருபோதும் வரவேண்டாம். ஓரிடத்தில் ஈகோ இருந்தால் அங்கே மனம் நிச்சயம் அமைதியாக இருக்காது. மனம் அமைதியாக இருக்காவிட்டால் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஸோ... ஈகோ வேண்டவே வேண்டாம்!

மொத்தத்தில் விட்டுக்கொடுங்கள்; மனம்விட்டு பேசுவதைத் தவிர!

அப்புறம் என்ன...?

'திருப்தி'யான வாழ்க்கையை நீங்களும் உணர்வீர்கள்.



Share:

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பியர் சொர்க்கம்!


பீர் என்கிற பியரை அறியாத இளைஞர்கள் இருக்க முடியாது. இந்த பெருமை தமிழக அரசைத்தான் சேரும்.


ஆம்... டாஸ்மாக் உபயத்தால் இன்றைய இளைஞர்கள் பலரும் பியர் விரும்பிகளாகிவிட்டனர்.


பியரை சாப்பிட்டால் மட்டும் போதாது, தண்ணீருக்குள் இருந்து கொண்டு தண்ணி அடிப்பது போல, பியருக்குள் இருந்து கொண்டு பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனையில் உருவானதுதான் செக் குடியரசு நாட்டில் உள்ள அந்த ஆடம்பர ஓட்டல். அந்த ஓட்டலின் பெயர் சோடாவார்.


இந்த சொகுசு ஓட்டலில் எந்த குழாயை திருகினாலும் தண்ணீருக்குப் பதிலாக பியர் வருகிறது. அதனால், இந்த ஓட்டலை அங்குள்ள மது பிரியர்கள் பியர் ஓட்டல் என்றே அழைக்கிறார்கள்.


சோடாவார் ஓட்டலின் முகப்பு பகுதியில் அலங்கார நீரூற்று ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதன் அருகில் உள்ள குழாயை திருகினாலும் கூட பியர்தான் வருகிறது.


இந்த ஆடம்பர ஓட்டல் பியருக்கு பெயர் போனது என்பதை உறுதி செய்யும் வகையில், ஓட்டலின் முகப்பிலேயே இரும்பு கம்பிகளால் ஆன அலங்கார வளைவு வைத்திருக்கிறார்கள்.


பியர் நிரப்பப்பட்ட தொட்டியில் இளம்பெண் ஒருத்தி குளிப்பது போல் அதில் காட்சி இடம்பெற்றுள்ளது.



ஓட்டலுக்குள் நுழைந்தாலும் அதே காட்சியைக் காண முடிகிறது. இந்த ஓட்டலில் படுக்கையறை பெரிதாக இருக்கிறதோ இல்லையோ, அத்தனை குளியல் அறைகளையும் பெரிய அளவில் அமைத்து இருக்கிறார்கள்.


ஓட்டலின் வரவேற்பு அறையே நம்மை மிரள வைக்கிறது. ஒரு குண்டு பெண் கையில் பியர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளர்களை ஏந்தியபடி காட்சித் தருகிறார். அவரது மேலாடை சற்று கீழே இறங்கி நம்மை கிளுகிளுக்க வைக்கிறது.


‘வழிந்தபடியே’ அந்த பெண்ணை நெருங்கினால் ஏமாற்றம்தான் மிச்சம். உண்மையில் அவர் பெண் அல்ல. ஒரு பெண் போன்ற மெழுகுச்சிலை. ஆனால், அவர் கையில் உள்ள கண்ணாடி டம்ளர்களில் காணப்படும் பியர் ஒரிஜினல்தான்.


இந்த ஓட்டலில் தண்ணிக்குள் இருந்தபடியே தண்ணி அடிக்க விசேஷ ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. செலவுதான் மிக அதிகம்.


ஆண் வாடிக்கையாளர்களை கவர்ச்சியான ஆடை அணிந்த அழகிய இளம்பெண்கள் குளியல் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவரது ஆடையை அந்தப் பெண்களே களைகிறார்கள்.


பின்னர், ஜில் பியர் நிரப்பப்பட்ட தொட்டிக்குள் அவரை இறங்க வைக்கிறார்கள். அவரும் அந்த பெண்களின் அழகில் கிறங்கிப்போய் தொட்டிக்குள் இறங்குகிறார்.


கழுத்தளவு பியரில் அவர் படுத்துக்கொள்ள அதன்பிறகு அவருக்கு விலை உயர்ந்த கண்ணாடி டம்ளரில் இளம் பெண்கள் பியரை ஊற்றிக் கொடுக்கிறார்கள். அவரும் அதை வாங்கி உதட்டுக்கு கொடுதது சப்புகிறார்.


சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை, அது இங்கேதான் என்கிற உணர்வு அவருக்குள் ஏற்படுகிறது.


இப்படித்தான் பலரும் இந்த ஆடம்பர சொகுசு பியர் ஓட்டலுக்கு வந்து சொர்க்கத்தின் இன்பத்தை அனுபவித்துச் செல்கிறார்கள்.


ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இங்கு வந்து பியரில் குளித்துக் கொண்டே பியர் குடித்து மகிழ்கிறார்கள். சொர்க்கத்தை தேடுகிறார்கள்.


உலகம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்குங்க...!
Share:

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

விக்கிபீடியாவில் நெல்லை விவேகநந்தாவின் நூல்

அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும் (நூல்)
Ayya vaikundar book cover.jpg
நூல் பெயர் அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும்
நூல் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா
வகை வரலாறு
பொருள் ஆன்மிக வரலாறு
இடம் வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தி. நகர்,
சென்னை
- 600 017.
மொழி தமிழ்
பதிப்பகம் வானதி பதிப்பகம்
பதிப்பு டிசம்பர், 2010
பக்கங்கள் 232
ஆக்க அனுமதி ஆசிரியருக்கு
ய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் அய்யா வைகுண்டர் பற்றி நெல்லை விவேகநந்தா எழுதிய 232 பக்க வரலாற்று நூல். இது சென்னை, வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்

மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் பிறந்த ஜெயமுருகானந்தன் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் சென்னையில் 
விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகள், தொடர்கள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் சுவாமி

வாழ்த்துரை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பின்ராக இருக்கும் எஸ். ஆர். ஜெயதுரை இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

அணிந்துரை

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியின் தர்மகர்த்தா மற்றும் அய்யா வைகுண்டர் நற்பணி சங்கத்தின் தலைவராகவும் உள்ள எஸ்.பால்பையன் இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பாராட்டுரை

சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தருமபதியின் துணைத் தலைவர் எஸ். தேவதாஸ் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.

விமர்சனப் பார்வை

முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி இந்நூல் குறித்த விமர்சனப் பார்வையை அளித்திருக்கிறார்.

மதிப்புரை

சென்னையைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் “தமிழ்மாமணி” பனையபுரம் அதியமான் மதிப்புரை தந்திருக்கிறார்.


இந்த நூல் வரலாறு, அய்யா நிகழ்த்திய அற்புதங்கள், வழிபாட்டுப் பாடல்கள் எனும் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

 

  1. நாஞ்சில் நாடு, திருவாங்கூர் சமஸ்தானம் - ஒரு பார்வை
  2. விதியை மாற்ற அவதரித்த பகலவன்
  3. கொடுமைகள் - ஈன துரோகங்கள்
  4. சிந்தனையைத் தூண்டிய இளமைப் பருவம்
  5. ஒட்டிக் கொண்ட தீரா நோய்
  6. கடலில் நடந்து வந்தார்.
  7. சம்பூர்ணதேவன் கதை
  8. கடலுக்குள் நடந்தது என்ன?
  9. தவமும், சாட்டி நீட்டோலை உதயமும்
  10. ஆதிக்க வெறிக்கு எதிராகக் கிளர்ந்து எழல்
  11. அய்யாவைத் தேடி வந்த சூழ்ச்சி
  12. அய்யாவிடம் அமிர்தமான விஷம்
  13. கைது செய்ய உத்தரவு
  14. அய்யா கைது, பக்தர்கள் கதறலும்
  15. தெய்வத்திற்கே சோதனை
  16. மீண்டும் தவம்
  17. அய்யாவும், அகிலத்திரட்டு அம்மானையும்
  18. அய்யாவும் ஆன்மிகமும்
  19. தோள்சீலை போராட்டம் - ஒரு பார்வை
  20. தோள்சீலை போராட்டமும் சான்றோரும்
என்கிற 20 உள் தலைப்புகளில் அய்யா வைகுண்டர் வரலாறு முழுமையாகத் தரப்பட்டுள்ளன.
  
அய்யா நிகழ்த்திய அற்புதங்கள்
  1. நிறைவேறிய ஒரு கன்னிப்பெண் ஆசை
  2. பாம்பாக மாறிய பாம்படம்
  3. உயிர் காத்த சாமித்தோப்பு திருமண்
  4. ஊமை பேசிய அதிசயம்
  5. 46 வயதில் குழந்தை பாக்கியம்
  6. அய்யாவை இகழ்ந்ததால் வந்த சோதனை
  7. ஐயம் நீங்கிய ஐவர்
  8. பக்தி விலக்கிய சேறு
  9. பேய் உண்டா? இல்லையா?
  10. ஜாதியை வென்ற அய்யா வாக்கு
  11. மெய்சிலிர்த்த கிறித்தவர்!
  12. நகை கொண்டு வந்த பருந்து
  13. ஆணவத்தால் வந்த சோதனை
  14. அய்யா கொடுத்த புதையல்
  15. வறுமை - நோய் தீர்த்த தீர்த்தம்
எனும் தலைப்புகளில் அய்யாவின் அற்புதங்கள் சில தரப்பட்டுள்ளன.
 

வழிபாட்டுப் பாடல்கள்

 

 

  1. போதிப்பு
  2. உச்சிப்படிப்பு
  3. உகப்படிப்பு
  4. வாழப்படிப்பு
  5. கல்யாண வாழ்த்து
  6. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகள்
எனும் தலைப்புகளில் அய்யா வழியைப் பின்பற்றுபவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டிய பாடல்களுடன் அய்யாவின் பொன்மொழிகள் சிலவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Share: