வெள்ளி, 16 ஏப்ரல், 2010

முதல் நடிகைகள் யார்?


னித நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவளை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

இதை புரிந்துகொண்ட பெண், ஆண்கள் எதிரில் எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி நடிக்க ஆரம்பித்தாள். சீனப் பெண்கள் ஒருபடி மேலேப்போய் தங்களுக்கு எழுதப் படிக்கக்கூட தெரியாது என்பதுபோல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல; பல நூற்றாண்டுகளாகவே அவ்வாறு நடித்தார்களாம். அப்போது, அவர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆண்களுக்கு தெரியாமல் பெண்களே உருவாக்கி கற்ற அந்த எழுத்து வடிவத்தை நுசு என்கிறார்கள். நுசு என்றால் சீன மொழியில் பெண்ணின் எழுத்து என்று அர்த்தமாம்.
Share:

புதன், 14 ஏப்ரல், 2010

பெண்ணை பார்க்கும்போது கிளுகிளுப்பு ஏன்?


ண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டிரோன். இதேபோல், பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். உண்மையில், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்ரோஸ்டிரோன் உருவானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணின் விந்தகப் பகுதி.

இந்த விந்தகத் திசு டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணாக்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, கொஞ்சம் வழுக்கைத்தலை கொண்டவனாக, அதிக தசை வலிமை கொண்டவனாக, உடல் தோலில் ரோமங்களை கொண்டவனாக மாற்றுகிறது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது அந்த பெண் கொழுக்மொழுக் உடலை பெறுகிறாள். அவளது மார்பு பெரியதாகும், இடை சிறிதாக இருக்கும் அதேநேரத்தில் இடுப்பு அகலமாகிறது.

இந்த தோற்றத்தில் ஒரு பெண்ணை ஆண் ஆனவன் பார்க்கும்போது கிரங்கி, கிளுகிளுப்பு கொள்கிறான்.

மேலும், இதே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் ஒரு பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எந்த நோய்க்கிருமியும் அவளை நெருங்காமல் இருக்க ஒரு பாதுகாப்பு படலத்தை உடலில் ஏற்படுத்துகிறது.
அதனால் பெண்கள் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

Share:

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்

டந்த ஓரிரு வாரமாக எந்த நாளிதழை புரட்டினாலும் போலி மருந்து மாத்திரை பற்றி செய்திகள்.

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தான் வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை ஒருசில படுபாவிகளிடம் ஏற்பட்டிருப்பதைத்தான் இதுபோன்ற செயல்கள் காட்டுகிறது.

சமீபத்தில் சன் நியூஸ் செய்தியால் பரபரப்பாக பேசப்பட்ட சுவாமி நித்யானந்தா, செக்ஸ் வைத்துக்கொண்டது தவறு என்று எல்லா பதிவர்களுமே (நானும் தான்) சாடித் தீர்த்தார்கள். சிலர், 33 வயதே ஆன நித்யானந்தா செக்ஸ் வைத்துக்கொண்டார் என்ற குற்றத்திற்காக (?!) அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தார்கள்.

காவி உடை உடுத்தியவன், செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

காவி உடை உடுத்தி சாமியார் ஆன வாலிபன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்றால், சாதாரண மனிதன் காலாவதியாக குப்பைக்கு போக வேண்டிய மருந்து - மாத்திரைகளை புதிதாய் லேபிள் ஒட்டி விற்கலாமா?

நித்யானந்தா பற்றி கண்டபடி திட்டித்தீர்த்த பதிவர்கள், இந்த போலி மருந்து விற்பனை விஷயத்தில் மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

நித்யானந்தா சாமியார் விஷயத்தில் எந்த பெண்ணும் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் வரவில்லை. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சியில் இடம்பெற்ற நடிகைகூட, தான் அவருக்கு சேவை செய்ததாகவே குறிப்பிட்டு இருக்கிறார். நித்யானந்தாவும் அது ஒரு வகை ஆராய்ச்சி என்றே சொல்லியுள்ளார்.

ஆக, இவர்கள் வந்த வீடியோ காட்சி தப்பான ஒன்றாக இருந்தாலும்கூட, அவர்கள் இருவரும் விரும்பியே அதை செய்ததால், இதில் தவறு ஒன்றுமே இல்லைதான்.

ஆனால், பக்தர்கள் எல்லாம் கொதித்தெழுந்துவிட்டார்கள். ஆசிரமத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். அவரது ஆசிரமங்களால் பலன் பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள், மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

இப்போது இது பிரச்சினை அல்ல. நித்யானந்தா விஷயத்தில் நம் பதிவர்களும், பொதுமக்களும் எழுப்பிய வேகம் போலி மருந்து விஷயத்தில் மட்டும் இல்லை. இது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

ஒருவேளை... போலி மருந்து சாப்பிட்டு யார் செத்தா நமக்கு என்ன? நம்ம வீட்டுக்கும், நம் குடும்பத்திற்கும் ஒன்றும் ஆகவில்லையே... என்ற எண்ணமா?


இல்லை... யார் எக்கேடு கெட்டால் என்ன? நாடு எப்படி நாசமான போனால் என்ன என்ற எண்ணமா?

நீங்கள் போலி மருந்தால் பாதிக்கப்படவில்லை என்பது எப்படித் தெரியுமா? தினமும் பத்திரிகைகளை புரட்டுகிறீர்கள்தானே?


தமிழகம் முழுக்க, ஏன்... கிராமங்களில் கூட குப்பை குப்பையாக காலாவதியான மருந்து மாத்திரைகளை இரவோடு இரவாடு கொண்டிச் சென்றிருக்கிறார்கள், இன்னமும் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

நேற்று (ஏப்ரல் 3&ம் தேதி) சென்னை கூடுவாஞ்சேரி அருகே 2, 3 லாரிகள் நிறைய காலாவதியான மற்றும் போலி மருந்து மாத்திரைகளை இரவோடு இரவாக கொட்டிவிட்டு போய் இருக்கிறார்கள், நாசமாகப் போக வேண்டியவர்கள்.

இந்த பிரச்சினை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வரவில்லை என்றால், நீங்களும்தான் அந்த போலி மருந்து, மாத்திரையை வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். நானும்தான்!

இந்த விஷயத்தில் இப்போது பெரிய கேளிக்கூத்தே நடக்கிறது.

போலி மருந்து மாத்திரை பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்கிறார்களாம். இவர்கள் விசாரித்து என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றுமே ஆகப்போவது கிடையாது.

இந்த போலி மருந்து, மாத்திரைகளை தயாரித்து விற்று, தமிழக மக்களை ஏமாளி ஆக்கி கோடீஸ்வரர்கள் ஆன நாய்களும், அவர்களும் குடும்பமும்தான் நன்றாக இருக்கப்போகிறது.

ஏற்கனவே அவர்கள் பலபேரை போலி மருந்தால் கொன்றும், அரைகுறையாக கொன்றும் பல கோடி சுருட்டிவிட்டார்கள். அந்த பணத்தை தண்ணீராக செலவு செய்து, வழக்கில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்.

தமிழக மக்களும் ரொம்ப நல்லவர்கள் ஆயிற்றே... இன்னும் 3 மாதம் போனால் இவர்கள் இந்த விஷயத்தையே மறந்துபோய் விடுவார்கள்.

போலி மருந்து விற்று கோடீஸ்வரன் ஆன நாய்கள் சுதந்திரமாக வீதி உலா வருவார்கள். அடுத்த ஆண்டே மீண்டும் தங்கள் வேலையில் இறங்கிவிடுவார்கள்.

இதையெல்லாம் தடுக்க என்ன செய்ய வேண்டும்?



* அரபு நாடுகளில் பின்பற்றப்படும் சட்டம்தான் இந்த ஏமாற்று நாய்களுக்கு லாயக்கு.

* இவர்களை நடுரோட்டில் விட்டு பொதுமக்களாலே கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும்.

* இவர்கள் குடும்பத்து சொத்துக்கள் அனைத்தையும் அரசே எடுத்துக்கொண்டு, அவர்களை திவால் ஆனவர்களாக அறிவிப்பதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும்.

* முக்கியமாக அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.


இந்த குடும்பத்து பெண்களுக்கு தங்களது கணவன் ஊரை ஏமாற்றிதான் சம்பாதிக்கிறான் என்பது தெரியாமலா இருக்கும்? அதனால், இவர்களும் குற்றத்திற்கு துணை போனவர்களே! 

உங்களுக்கும் எனது பணிவான ஒரு வேண்டுகோள்...

போலிச்சாமியார்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாம்தான் தேடிப்போய் ஏமாறுகிறோம்.

ஆனால், போலி மருந்து விற்ற பரதேசி நாய்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்கள். அதனால், அந்த நாய்களை எதிர்த்து நிறைய எழுதுங்கள். உங்களது எழுத்திலாவது மக்களிடம் விழிப்புணர்வு பிறக்கட்டும்.

Share:

வியாழன், 1 ஏப்ரல், 2010

சுற்றுலா பிறந்த கதை


சுற்றுலா செல்லும் ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புதான் பலருக்கு கிடைக்காது.

ஆனால், சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் அப்படியே ப்ரெஸ் ஆகிவிடும். புதிதாய் பிறந்த உணர்வுகூட சிலருக்கு ஏற்படும். அதனால் இந்த சம்மரிலாவது அருகே உள்ள கூலான இடங்களுக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வாருங்கள்.

ஆமாம்... சுற்றுலா எப்படி பிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

இப்போது நினைத்த மாத்திரத்தில் விமானத்தில் உலகத்தை சுற்றி வரலாம். ஆனால், அந்த காலத்தில் இதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருந்தது.

உலக வரலாற்றில் முதன் முதலில் சுற்றுலாவை ஆரம்பித்து வைத்தவர்கள் ஐரோப்பியர்தான். கி.பி.15-ம் நூற்றாண்டில் புதிய நாடுகளை கண்டுபிடிக்கும் பணியில் முதன் முதலாக ஈடுபட்ட அவர்களே, தாங்கள் சார்ந்த மதத்தை பரப்பும் பொருட்டும், வாணிபத்திற்காகவும் கப்பல்களில் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அதுவே சுற்றுலா வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.


இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழியை முதன் முதலில் கண்டறிந்தவர் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா. இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்த இவர், 1498-ல் இந்தியாவில் கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.

வாஸ்கோடகோமாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுக்கு வேறு திசையில் வழி காணப்போகிறேன் என்று புறப்பட்டார், உலகம் உருண்டையானதுதான் என்று நம்பிக்கை கொண்ட கொலம்பஸ். ஆனால், அவர் கண்டுபிடித்ததாக அறிவித்தது இந்தியா அல்ல. பின்னாளில், இத்தாலியைச் சேர்ந்த அமெரிக்கோ வெஸ்புகியால் மீண்டும் அந்த பகுதி கண்டறியப்பட்டு, அவரது பெயராலேயே அமெரிக்கா என்று அழைக்கப்பட்டது.

இப்படி பலரும் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து உலக நாடுகளை கண்டுபிடிக்க புறப்பட்டாலும், போர்ச்சுக்கீசிய மாலுமியான மெகல்லன் என்பவரே உலகை முதன் முதலில் சுற்றி வந்த பயணி என்ற பெயரைப் பெறுகிறார்.

அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்து, தென் அமெரிக்காவை சுற்றிக்கொண்டு பசிபிக் கடல் வழியாக சென்ற அவர் ஒரு தீவைக் கண்டதும் இறங்கினார். அந்த தீவுக் கூட்டத்திற்கு ‘பிலிப்பைன்ஸ்’ என்று பெயரிட்டார். ஆனால், அந்த தீவில் வாழ்ந்த மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

அவரது கப்பல்களில் ஒன்றான விக்டோரியா மட்டும் இந்தியப் பெருங்கடலை அடைந்து, ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு மீண்டும் போர்ச்சுக்கலை அடைந்தது. உலகம் உருண்டையானதுதான் என்பதை மெகல்லனின் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தியது. உலகத்தை சுற்றிவரும் வழியிலேயே மெகல்லன் கொல்லப்பட்டாலும், அவர் தலைமையில் சென்ற கப்பல் சுற்றி வந்த காரணத்தால், உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் இவர்.

இதன்பிறகு உலக நாடுகள் இடையே வாணிபத் தொடர்பு அதிகரித்தது. புதிய நாடுகளை காணும் ஆவலில் ஒவ்வொரு நாட்டினரும் சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர். சுற்றுலாத் தொழிலும் பிரபலமாக ஆரம்பித்தது.


இருந்தாலும், உலகில் முதலாவது சுற்றுலா பயண முகவர் என்கிற பெயரை பெறுகிறவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் குக். இவரே உலக சுற்றுலாவின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர்தான், முதலின் முதலில் பொதுமக்களை திரட்டி இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

கி.பி.1841ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக பொருட்காட்சியைக் காண ஒன்றரை லட்சம் மக்களை அழைத்துச் சென்று அசத்தினார் இவர். இதன்மூலம் அவருக்கு கணிசமான லாபமும் கிடைத்தது. அதன்பிறகு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையே ஒரு தொழிலாக செய்தார்.

சுற்றுலாவின் மூலம் தாமஸ் குக் பிரபலமானதை அடுத்து ஐரோப்பாவின் பிற நாடுகளிலும், அமெரிக்காவிலும் பலர் தாமஸ் குக்கின் சுற்றுலாத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சுற்றுலாவின் வளர்ச்சியும் வேகமெடுத்தது.

மேலும், 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி தொழில்துறையில் மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. முதன் முதலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும், அதைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பரவியது.

தொழிற்புரட்சியின் விளைவால் அளவுக்கு மீறி உழைத்து வந்த தொழிலாளர்கள் ஓய்வை விரும்பினர். மனஅழுத்தத்தை குறைத்துக்கொள்ள இயற்கை எழில் சூழ்ந்த வெளியூர்களுக்கு சுற்றுலா சென்றுவர ஆசைப்பட்டனர்.

தொழிற்புரட்சியின் குறிப்பிடத்தக்க விளைவுகளுள் ஒன்றான தொழிற்சங்கங்களின் தோற்றத்தால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றார்கள். கோரிக்கைக்காக போராடினார்கள். இதன்காரணமாக, அவர்களை கசக்கி பிழிந்து வாங்கப்பட்ட வேலையின் நேரம் குறைந்தது. ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தது. இந்த சலுகையை அனுபவிக்க அவர்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர்.

உல்லாச சுற்றுலாவுக்கு மட்டுமின்றி உலக மதங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் சிலர் நாடு நாடாக சுற்றுலா செல்ல தொடங்கினார்கள். இன்னும் சிலர் பிற நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள சுற்றுலா புறப்பட்டனர்.

நாளடைவில் நவீன கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து வசதிகள் பெருகிவிட... சுற்றுலா வளர்ச்சியானது ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. இன்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டோம்.

மேலும், சுற்றுலா பற்றிய சில குறிப்புகள்...

* உலகில் முதன் முதலாக கி.பி.1830ல் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலுக்கும் மான்செஸ்டருக்கும் இடையேதான் ரெயில்பாதை ஆரம்பிக்கப்பட்டது. இது, சுற்றுலா வளர்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
* தூங்கும் வசதியுடன் கூடிய ரெயில் வண்டியை அறிமுகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள். ரெயிலில் தூங்கிக்கொண்டே பயணம் செய்வதற்கு ஒரு நாள் ஒரு இரவுக்கு அவர்கள் வசூலித்தது 2 டாலர்.

* விளம்பரப்படுத்தப்பட்ட உலகின் முதல் சுற்றுலாவைத் தொடங்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்வியசர். மத போதகரான இவர், லீசெஸ்டா என்னும் ஊரில் நடந்த சமயக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 570 பயணிகளை ரெயிலில் அழைத்துச் சென்றார்.

* ஒருவர் தான் வாழ்ந்து வரும் அல்லது பணிபுரிந்து வரும் இடத்தில் இருந்து வெளியிடத்திற்குச் சென்று குறுகிய காலம் தங்கி, அங்கு பல இடங்களுக்கு இன்பப் பயணம் சென்று பார்த்து வருவதுதான் சுற்றுலா என்று, சுற்றுலாவுக்கு விளக்கம் தருகிறது இங்கிலாந்து சுற்றுலாக்கழகம்.
Share: