வெள்ளி, 19 நவம்பர், 2010

பிரசவமாகும் ஒரு சினிமா பாடல்!



இது எனது 150-வது இடுகை! 
வனுக்கு அழகான அத்தைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். சின்ன வயதிலேயே அவளுக்கு இவன்தான், இவனுக்கு அவள்தான் என்று பேசி முடித்துவிட்டார்கள் பெரியவர்கள். அதனால்தான் என்னவோ, தன் முறைப்பெண்ணை உரிமையோடு அழைக்கிறான், திருமணம் செய்ய.

பல்லவி

அழகே
அத்த மகளே
நீ ஏஞ்சலா?
நான் உன் ஊஞ்சலா?

இங்கே கொஞ்சம் வா - என்
மஞ்சம் கொள்ளை கொள்ள வா...

நித்தம் உன்னை அள்ளவா?
முத்தத்தால் கிள்ளவா?

ஆமாம் புள்ள...
உண்மைய சொல்லு புள்ள
அதுக்கு ஏன்
வெட்கம் உனக்குள்ள...

சரணம் - 1

தென்றல் வீசும் நேரத்தில்
புயலுக்கு என்ன வேலை?
சோலை கொண்ட கானகத்தில்
நமக்கு நல்ல வேளை!

கொஞ்சிப்பேச இருக்கு நோக்யா
நேரம் காலம் பார்க்காம - நீ
என்னை எப்பவும் நோக்கியா!

சரணம் - 2

மின்னும் வைரம்கூட தோத்துப்போச்சு
உன் அழகு எப்போ வெட்ட வெளிச்சமாச்சு?

முறைப்பையன் நான் இங்கிருக்க
ஊரைக் கூட்டி என்ன கேட்க?

ஆட்டு நீயும் தலைய
நானும் போடுறேன் மூணு முடிச்ச...

சரணம் - 3

கனவு வந்தா களவும் மறந்துபோகும்
நனவு வந்தா பேச்சும் நின்னுபோகும்

ஒட்டுமொத்த மாயமும் உனக்குள்ள...
வேட்டு வெச்சுபுட்டியே எனக்குள்ள...

சரணம் - 4

தூக்கம் போயி நாளாச்சு
நீயும் நானாச்சு
நானும் நீயாச்சு
வேறு என்ன சொல்ல பொட்டப்புள்ள?
உடனே நீயும் என்ன அள்ளுபுள்ள


- நெல்லை விவேகநந்தா
Share: