ஞாயிறு, 6 மே, 2012

பேரழகி கிளியோபாட்ரா - புத்தக மதிப்புரை



நெல்லை விவேகநந்தா எழுதி வெளியான பேரழகி கிளியோபாட்ரா - வரலாற்று நாவலின் புத்தக விமர்சனம்  தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. அந்த விமர்சனக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...

பேரழகி கிளியோபாட்ரா வரலாற்று நாயகி. அறிவும், கூர்த்த மதியும் பெற்ற அவரை அதிநுட்பமாக ஆய்வு செய்து  இந்த நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர். எகிப்தின் அரியணையில் பேரரசியாக அவர் தொடர அவர் மேற்கொண்ட  உத்திகளையும் படைத்திருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு முன்பும், அதற்குப் பின்பும் எத்தனையோ பேர் கிளியோபாட்ரா என்ற பெயரில் இருந்தபோதும், இவரு க்கு மட்டும் ஏன் இன்னமும் இத்தனை பெயர், அப்படி என்ன ஈர்ப்பு என்பதை படைத்த ஆசிரியர் செயல் பார £ட்டிற்குரியது.

அத்திப் பழக்கூடையில் மறைத்து வைத்த நச்சுப்பாம்பை கடிக்க விட்டு பரிதாப முடிவைச் சந்தித்த கிளியோபாட்ரா  கனவுகளை, காதல் காவியமாக இதில் வாசகர்கள் காணலாம்.

நன்றி: தினமலர் 6.5.2012
 
நூல் கிடைக்கும் இடம் : 

கங்கை வெளியீடு (வானதி பதிப்பகம்)
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை -17.
போன் : 044 2432810
நூலின் மொத்த பக்கங்கள் : 328.
Share: