ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்

டந்த ஓரிரு வாரமாக எந்த நாளிதழை புரட்டினாலும் போலி மருந்து மாத்திரை பற்றி செய்திகள்.

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தான் வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை ஒருசில படுபாவிகளிடம் ஏற்பட்டிருப்பதைத்தான் இதுபோன்ற செயல்கள் காட்டுகிறது.

சமீபத்தில் சன் நியூஸ் செய்தியால் பரபரப்பாக பேசப்பட்ட சுவாமி நித்யானந்தா, செக்ஸ் வைத்துக்கொண்டது தவறு என்று எல்லா பதிவர்களுமே (நானும் தான்) சாடித் தீர்த்தார்கள். சிலர், 33 வயதே ஆன நித்யானந்தா செக்ஸ் வைத்துக்கொண்டார் என்ற குற்றத்திற்காக (?!) அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தார்கள்.

காவி உடை உடுத்தியவன், செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

காவி உடை உடுத்தி சாமியார் ஆன வாலிபன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்றால், சாதாரண மனிதன் காலாவதியாக குப்பைக்கு போக வேண்டிய மருந்து - மாத்திரைகளை புதிதாய் லேபிள் ஒட்டி விற்கலாமா?

நித்யானந்தா பற்றி கண்டபடி திட்டித்தீர்த்த பதிவர்கள், இந்த போலி மருந்து விற்பனை விஷயத்தில் மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

நித்யானந்தா சாமியார் விஷயத்தில் எந்த பெண்ணும் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் வரவில்லை. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சியில் இடம்பெற்ற நடிகைகூட, தான் அவருக்கு சேவை செய்ததாகவே குறிப்பிட்டு இருக்கிறார். நித்யானந்தாவும் அது ஒரு வகை ஆராய்ச்சி என்றே சொல்லியுள்ளார்.

ஆக, இவர்கள் வந்த வீடியோ காட்சி தப்பான ஒன்றாக இருந்தாலும்கூட, அவர்கள் இருவரும் விரும்பியே அதை செய்ததால், இதில் தவறு ஒன்றுமே இல்லைதான்.

ஆனால், பக்தர்கள் எல்லாம் கொதித்தெழுந்துவிட்டார்கள். ஆசிரமத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். அவரது ஆசிரமங்களால் பலன் பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள், மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

இப்போது இது பிரச்சினை அல்ல. நித்யானந்தா விஷயத்தில் நம் பதிவர்களும், பொதுமக்களும் எழுப்பிய வேகம் போலி மருந்து விஷயத்தில் மட்டும் இல்லை. இது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

ஒருவேளை... போலி மருந்து சாப்பிட்டு யார் செத்தா நமக்கு என்ன? நம்ம வீட்டுக்கும், நம் குடும்பத்திற்கும் ஒன்றும் ஆகவில்லையே... என்ற எண்ணமா?


இல்லை... யார் எக்கேடு கெட்டால் என்ன? நாடு எப்படி நாசமான போனால் என்ன என்ற எண்ணமா?

நீங்கள் போலி மருந்தால் பாதிக்கப்படவில்லை என்பது எப்படித் தெரியுமா? தினமும் பத்திரிகைகளை புரட்டுகிறீர்கள்தானே?


தமிழகம் முழுக்க, ஏன்... கிராமங்களில் கூட குப்பை குப்பையாக காலாவதியான மருந்து மாத்திரைகளை இரவோடு இரவாடு கொண்டிச் சென்றிருக்கிறார்கள், இன்னமும் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

நேற்று (ஏப்ரல் 3&ம் தேதி) சென்னை கூடுவாஞ்சேரி அருகே 2, 3 லாரிகள் நிறைய காலாவதியான மற்றும் போலி மருந்து மாத்திரைகளை இரவோடு இரவாக கொட்டிவிட்டு போய் இருக்கிறார்கள், நாசமாகப் போக வேண்டியவர்கள்.

இந்த பிரச்சினை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வரவில்லை என்றால், நீங்களும்தான் அந்த போலி மருந்து, மாத்திரையை வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். நானும்தான்!

இந்த விஷயத்தில் இப்போது பெரிய கேளிக்கூத்தே நடக்கிறது.

போலி மருந்து மாத்திரை பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்கிறார்களாம். இவர்கள் விசாரித்து என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றுமே ஆகப்போவது கிடையாது.

இந்த போலி மருந்து, மாத்திரைகளை தயாரித்து விற்று, தமிழக மக்களை ஏமாளி ஆக்கி கோடீஸ்வரர்கள் ஆன நாய்களும், அவர்களும் குடும்பமும்தான் நன்றாக இருக்கப்போகிறது.

ஏற்கனவே அவர்கள் பலபேரை போலி மருந்தால் கொன்றும், அரைகுறையாக கொன்றும் பல கோடி சுருட்டிவிட்டார்கள். அந்த பணத்தை தண்ணீராக செலவு செய்து, வழக்கில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்.

தமிழக மக்களும் ரொம்ப நல்லவர்கள் ஆயிற்றே... இன்னும் 3 மாதம் போனால் இவர்கள் இந்த விஷயத்தையே மறந்துபோய் விடுவார்கள்.

போலி மருந்து விற்று கோடீஸ்வரன் ஆன நாய்கள் சுதந்திரமாக வீதி உலா வருவார்கள். அடுத்த ஆண்டே மீண்டும் தங்கள் வேலையில் இறங்கிவிடுவார்கள்.

இதையெல்லாம் தடுக்க என்ன செய்ய வேண்டும்?



* அரபு நாடுகளில் பின்பற்றப்படும் சட்டம்தான் இந்த ஏமாற்று நாய்களுக்கு லாயக்கு.

* இவர்களை நடுரோட்டில் விட்டு பொதுமக்களாலே கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும்.

* இவர்கள் குடும்பத்து சொத்துக்கள் அனைத்தையும் அரசே எடுத்துக்கொண்டு, அவர்களை திவால் ஆனவர்களாக அறிவிப்பதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும்.

* முக்கியமாக அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.


இந்த குடும்பத்து பெண்களுக்கு தங்களது கணவன் ஊரை ஏமாற்றிதான் சம்பாதிக்கிறான் என்பது தெரியாமலா இருக்கும்? அதனால், இவர்களும் குற்றத்திற்கு துணை போனவர்களே! 

உங்களுக்கும் எனது பணிவான ஒரு வேண்டுகோள்...

போலிச்சாமியார்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாம்தான் தேடிப்போய் ஏமாறுகிறோம்.

ஆனால், போலி மருந்து விற்ற பரதேசி நாய்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்கள். அதனால், அந்த நாய்களை எதிர்த்து நிறைய எழுதுங்கள். உங்களது எழுத்திலாவது மக்களிடம் விழிப்புணர்வு பிறக்கட்டும்.

Share: