ஞாயிறு, 13 நவம்பர், 2011

புத்தக வடிவில் கிளியோபாட்ரா வரலாற்று நாவல்!



பேரழகி கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவளைப் பற்றிக் கேட்டால், அவள் மிகவும் பேரழகி, கழுதைப்பாலில் குளித்து, தனது அழகை தக்க வைத்து வந்தாள் என்று சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள், அவள் எகிப்தை ஆண்ட பேரரசி. ரோமானிய மாவீரர்களான ஜூலியஸ் சீஸர், ஆண்டனி ஆகியோர் அவள் மடியில் மயங்கிக் கிடந்தார்கள் என்பார்கள்.


கிளியோபாட்ராவின் வரலாறு பெருங்கடல் என்றால், அதில் இந்த தகவல்கள் மிக மிக சொற்பமே. அவள் யாருக்கு பிறந்தாள், எப்படி ஆட்சிக்கு வந்தாள், ஏன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டாள், சீஸர் உடனான அவளது காதல் எப்படி போனது, சீஸருக்குப் பிறகு ஏன் ஆண்டனியை காதலித்தாள், ஆண்டனியை காதலிக்கப் போய் ரோமானிய சரித்திரம் எப்படி மாறியது, தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது... இப்படி யாரும் அறியாத வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டது கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு.


அவளது அந்த வரலாறு ஏ டூ இசட் வரையில் இப்போது புத்தக வடிவில் வந்து விட்டது. நெல்லை விவேகநந்தா எழுதிய "பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்" என்ற வரலாற்று நாவலில் நீங்கள் கிளியோபாட்ரா பற்றி தெரியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. நாவல் வடிவில், மிக மிக எளிய நடையில் உலகத் தரத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர்-டைரக்டர் ரா.பார்த்திபன், சின்ன அசின் என்று சினிமா உலகில் அழைக்கப்படும் நடிகை பூர்ணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.


இன்னும் சில தினங்களில் புத்தகம் வெளியாக இருக்கிறது. புத்தகத்தை, வழக்கம்போல் பதிப்புலகில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள்.


324 பக்கங்களில் வெளியாகும் இந்த நூலுக்கு உங்களது ஆதரவு வழக்கம் போல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும், என்ன விலை என்பன போன்ற விவரங்களுடன் விரைவில் சந்திக்கிறேன். நாளை... எனது நூலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர் - டைரக்டர் ரா.பார்த்திபன், நடிகை பூர்ணா எழுதிய வாழ்த்துரைகளை பார்க்கலாம்.


புத்தகம் பற்றிய ஆர்டர் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க...

வானதி பதிப்பகம்

23, தீனதயாளு தெரு,

தி.நகர், சென்னை-17

போன் : 044 - 24342810, 24310769





நட்புடன்

நெல்லை விவேகநந்தா
Share: