வெள்ளி, 5 மார்ச், 2010

ஆண்மையை பாதுகாக்கும் செவ்வாழை


ல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண் பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்-த-கைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், எளிதில் குழந்தை பாக்கியமும் கிட்டும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரஸ்தாளி வாழைப்பழத்தை தண்ணீர் விட்டு கரைத்து மூன்றுவேளை உட்கொள்ள கொடுத்தால் போதும். அந்த பாதிப்பு உடனே நின்றுவிடும்.
Share:

குழந்தை கிளிக் ஆகும் நேரம்


ணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிப்படுகிறது.

பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்-தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.

கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.
இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம்.

இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Share:

மஞ்சள் தினமும் பூசலாமா?

ங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு காரணம், அது மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுதான். அதே மஞ்சளை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் வயது கூடுதலாக தெரியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

மஞ்சளில் கஸ்தூரி வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் பயனை முழுமையாக பெற சுத்தமான கஸ்தூரி மஞ்சளை கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்னதாக, உடலில் தேங்-காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தேய்த்து, அதன்பின் இந்த கஸ்தூரி மஞ்சள் கலவையை பூசி குளிக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் மின்னத் தொடங்கிவிடும். இளமை அழகும் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
Share: