திங்கள், 8 மார்ச், 2010

ஹிட்லரின் ஆரம்ப முகம்



ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான்.

இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பே வைத்துக்கொள்வான். அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு உரிமையாளரின் பெண். மறுநாள் காலையில், "ஏன் இரவில் வெகுநேரம் வரை தூங்காமல் விழித்திருக்கிறாய்? ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாயா? " என்று கிண்டல் செய்தாள்.

அந்த ஆண் மகனுக்குள் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

"ஆமாம்! ஐரோப்பா கண்டத்தையே எனக்கு கீழ் கொண்டுவரப் போகிறேன் " என்று உறுதியாக சொன்னான் அந்த ஓவியன்.

அப்படிச்சொன்ன அந்த ஓவியன், ஐரோப்பிய கண்டத்தையே நடுநடுங்க வைத்தான். பல ஐரோப்பிய நாடுகளை தனக்கு கீழ் கொண்டு வந்தான்.

அவன் தான் ஹிட்லர்.
Share:

0 கருத்துகள்: