சனி, 23 ஏப்ரல், 2011

விபரீத 'ஆசை' தந்த மன பாதிப்பு


டலுக்குள்ளும், மனதுக்குள்ளும் இளம்பருவம் நிகழ்த்தும் மாயாஜாலத்தின் விளைவால் ஆணும், பெண்ணும் உடலால்-உள்ளத்தால் பின்னிப்பிணைந்து புதிய உயிரின் தேடலுக்கோ அல்லது உடலுக்கும், உள்ளத்துக்குமான திருப்திக்கோ ஈடுபடும் பிணைப்புதான் செக்ஸ்.

அந்த புனித உறவில் கணவன்-மனைவியருக்குள் ஆத்மார்த்த திருப்தி, மனங்களை ஆழமாக தொட்ட புரிதல் இருக்க வேண்டும். அங்கேதான் செக்ஸ் புனிதம் பெறுகிறது.

ஆனால், இன்று எத்தனைபேர் ஒருவரையருவர் புரிந்துகொண்டு செக்ஸில் ஈடுபடுகிறார்கள்?

இந்த பட்டியலில் வந்து சேர்வோர் குறைவு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏதோ ஒரு திருப்திக்காக துணையுடன் இணையும் இவர்கள், அந்த புனித பந்தம் பற்றி கடைசி வரையில் தெரியாமலேயே போய்விடுகிறார்கள். தங்களது வருங்கால சந்ததியினருக்கும் அதை அறிவுறுத்த மறந்து விடுகிறார்கள்.

தம்பதியர் தங்களுக்குள் மனம் விட்டு பேசினாலே செக்சைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு எத்தனைபேர்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்? பெரும்பாலும், அவர்களுக்குள் எட்டிப்பார்க்கும் ஈகோ அதை தடுத்து விடுகிறது.

துணையின் மனதையும், ஏக்கங்களையும் புரிந்து கொள்ளாதவர்கள் தவறான வழிக்காட்டலில் பயணித்து, குற்ற உணர்வுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஐரோப்பிய இளைஞர்கள் செக்ஸ் விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள் என்கிற கோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கிறது.

அங்குள்ள இளம் வயதினர் தங்களது செக்ஸ் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. மேற்படி மது, போதை பொருளால்தான் தங்கள் அந்த உறவில் முழு திருப்தி அடைய முடியும் என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதுதான் இதற்கு காரணம்.

"உங்கள் கணிப்புபடி நீங்கள் மது, போதை பொருள்களால் செக்ஸ் உறவில் திருப்தி அடைகிறீர்களா?" என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வியை கேட்டு, தகவல்களை சேகரித்தார்கள். அதற்கு பதிலளித்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரும், பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரும் அதற்கு ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.

இந்த விபரீத தேடலால், ஐரோப்பிய இளம் வயதினர் பாதுகாப்பற்ற உறவு வைத்துக்கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று தங்களது ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், இந்த காரணத்தால் அவர்கள் பாலியல் நோய்க்கும் ஆளாகின்றனர் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பாவில் மட்டுமல்ல; பல்வேறு நாட்டினரிடமும் இந்த தவறான எண்ணம் பரவி காணப்படுவது, இந்த சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

இங்கிலாந்தில் 30 சதவீதம் பேரும், இத்தாலியில் 36 சதவீதம் பேரும், ஸ்பெயினில் 37 சதவீதம் பேரும், ஆஸ்திரியாவில் 50 சதவீதம் பேரும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்கு முன்பாக மது அருந்துகிறார்களாம்.

இந்த விபரீத போதை உறவில் ஈடுபடுவோர் கூறும்போது, வெட்க உணர்வை மறந்து, புதிய வகையில் உறவு கொள்ளவே தாங்கள் அதை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

"இந்த பழக்கம் தவறான ஒன்று. ஆரம்பத்தில் திருப்தி தருவதாக தோன்றினாலும், போகப்போக உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்" என்று எச்சரிக்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் இந்த விபரீத ஆசைகள் நம் இந்தியர்களையும் தற்போது தொற்றிக்கொண்டுள்ளது. மது, போதைகளில் அடிக்கடி திளைப்பவர்கள் இந்த ஆசையை விரும்புகிறார்களாம்.

அதற்கு இந்த அமுதாவையே உதாரணமாக கூறலாம்.

ஒருநாள் அவளது கணவன் அவளிடம் தனது விபரீத ஆசையை கூறினான்.
'பீர் குடித்துவிட்டு செக்ஸ் உறவில் ஈடுபட்டால் முழு திருப்தி கிடைக்கும் என்று என் நண்பன் கூறினான். அதற்கு நீ ஒத்துக்கொள்வாயா?' என்று கேட்டான்.

அவளும் ஒருநாள்தானே என்று அனுமதி கொடுத்தாள். அன்று அவர்களுக்குள் நிகழ்ந்த உறவில் வித்தியாசமான இன்பத்தை அமுதா உணர்ந்தாள். அவளுக்கு அந்த இன்பம் அடிக்கடி வேண்டும் என்பதுபோல் இருந்தது.

மறுநாளும் பீர் வாங்கி வருமாறு கணவனிடம் கூறினாள். அன்றைய உறவிலும் அவளுக்கு வித்தியாசமான இன்பம்-அனுபவம் கிடைத்தது.

ஒருகட்டத்தில் அந்த இன்பத்திற்கு அவள் அடிமையே ஆகிவிட்டாள். கணவன் பீர் பாட்டில் வாங்கி வராவிட்டால், இவளே பக்கத்து வீட்டு பையனிடம் பணத்தை கொடுத்து, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதை வாங்கி வரச் செய்தாள்.

இதன்விளைவு... வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பீரை கையில் எடுத்த அமுதாவின் கணவன், அந்த மதுவுக்கு நிரந்தர அடிமை ஆகிவிட்டான். அமுதாவும் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகிவிட்டாள்.

உண்மையைச் சொல்லப் போனால் திருப்தியான செக்ஸ் உறவுக்கு மனம் விட்டு பேசுவதே சிறந்த மருந்து. அதுதான் செலவு இல்லாத, பின்விளைவுகளை ஏற்படுத்தாத அற்புத மருந்து.

உங்கள் மனதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் மனம் அழகானதாக இருந்தால் செக்ஸ் என்கிற அந்த புனித உறவும் அழகானதாக இருக்கும்.

அதற்கு என்ன செய்யலாம்?


* மேலே அதிகமாக குறிப்பிட்டதுபோல் மனம்விட்டு பேசுங்கள். அது எப்போதும் உங்களுக்குள் நிகழட்டும். மனதிற்குள், துணை பற்றிய ஏதோ ஒரு கருத்தை புதைத்துக்கொண்டு, அவரை உறவுக்கு அழைக்காதீர்கள்.

* எப்போதுமே உங்களை அழகாக உணருங்கள். நான் அழகாக இருக்கிறேன் என்று எப்போதும் நினைத்திருங்கள். உங்கள் மனம்-எண்ணங்கள் அழகாக இருந்தால்தான் நீங்கள் உடல் அளவிலும் அழகாக இருக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
* ஆடை விஷயத்திலும் அழகாக இருங்கள். கணவர் வீட்டுக்கு வரும்போது புதிய ஆடையில் இல்லாவிட்டாலும் சுத்தமான-தூய்மையான ஆடையில் இருங்கள். முகத்தில் புத்துணர்வும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். அப்போதுதான், உங்களை பார்த்த மாத்திரத்தில் உங்கள் கணவருக்கு உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் இருந்து உங்கள் கணவர் டென்ஷனாக வந்தாலும், உங்கள் மலர்ச்சியைப் பார்த்து அவரும் மகிழ்ந்து போவார்.
* உள்ளாடை விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்துங்கள். அதெல்லாம் தேவையற்ற விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். கிழிந்துபோன உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள்.
* நீங்களும், உங்களவரும் தனிமையில் இருக்கும்போது வெளிப்படையாக இருங்கள். அந்தநேரம் நீங்கள் செக்ஸியாக ஆடை அணிந்திருப்பதிலும் தவறில்லை. செக்ஸியாக உங்களைக் காட்டிக் கொள்வதிலும் தவறில்லை.

* உங்கள் துணைக்கு எங்கே தொட்டால், முத்தமிட்டால் பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருங்கள். அந்த இடங்களில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்துங்கள். உங்கள் மனம் இலவம் பஞ்சாய் பறக்கும்.
* செக்ஸ் விஷயத்தில் துணையின் எதிர்பார்ப்புகளை-விருப்பங்களை தவறாமல் கேளுங்கள். அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால், முயற்சியாவது செய்யுங்கள்.
* சுவிட்ச் போட்டவுடன் இயங்கும் இயந்திரம்போல் வேகமாக இயங்கி, வேகமாக இன்பத்தை முடித்துக் கொள்ளாதீர்கள். தேனை மொத்தமாக குடித்தால் பின்விளைவுகள் வேறுமாதிரியாகிவிடும். அதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடிக்க வேண்டும். இன்பமும் அப்படித்தான். அதை சிறிது சிறிதாகத்தான் அனுபவிக்க வேண்டும்.
* உறவுக்கு முன் துணையை கொஞ்சி மகிழுங்கள். வீணையை மீட்டுவதுபோல் ஆங்காங்கே மீட்டி கிளுகிளுப்பாக்குங்கள்.
* ஈகோ உணர்வு உங்களுக்குள் ஒருபோதும் வரவேண்டாம். ஓரிடத்தில் ஈகோ இருந்தால் அங்கே மனம் நிச்சயம் அமைதியாக இருக்காது. மனம் அமைதியாக இருக்காவிட்டால் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஸோ... ஈகோ வேண்டவே வேண்டாம்!

மொத்தத்தில் விட்டுக்கொடுங்கள்; மனம்விட்டு பேசுவதைத் தவிர!

அப்புறம் என்ன...?

'திருப்தி'யான வாழ்க்கையை நீங்களும் உணர்வீர்கள்.



Share:

1 கருத்துகள்:

Mahan.Thamesh சொன்னது…

அருமையான பதிவு
எனது வலைத்தளத்தில்
YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய
http://mahaa-mahan.blogspot.com/