ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அதிசய தூங்கா புளியமரம்


தூங்கா புளியமரம்
ன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்பு பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று காணப்படுகிறது.

இந்த மரத்தின் வயது 300-க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். இதை "தூங்காபுளியமரம்" என்று அழைக்கிறார்கள்.

அதாவது, சாதாரண புளியமரங்களைப்போல் இந்த அதிசய புளியமரத்தின் இலைகள் இரவுநேரத்தில் தூங்காது. அதாவது, மடிந்துபோய் இருக்காது. எப்போதும் ஃப்ரெஸ் ஆகவே இருக்கும்.

மேலும், இந்த புளியமரத்திற்கு பல்வேறு நோய்களை தீர்க்கும் அபார சக்தியும் உள்ளது. இந்த புளியமரத்தின் இலையை அரைத்து குடித்தால் எப்பேற்பட்ட நோயும் குணமாகிவிடும் என்கிறார்கள்.


குட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்கள், தங்கள் ஊருக்கு வரும்போது, இந்த தூங்காபுளியமரத்தின் இலைகளை தவறாமல் பறித்து கொண்டுச் செல்கிறார்கள்.

இந்த இலைகள் தங்களுடன் இருக்கும்பட்சத்தில், தங்களுக்கு எல்லாமே வெற்றியாக அமையும் என்ற அவர்களது நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

இன்னொரு தகவல் : பொதுவாக, நீர் தேங்கி நிற்கும் குளத்தை "குட்டை" என்று சொல்வார்கள். இந்த குட்டம் கிராமம் அமைந்துள்ள பகுதி ஆரம்பத்தில் குளமாக இருந்ததாம். அதனால் ஏற்பட்ட பெயர்தான் "குட்டம்".

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில்
 
திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையில் இந்த ஊர் அமைந்துள்ளது.

Share:

4 கருத்துகள்:

Nathan சொன்னது…

எங்களுடைய குலதெய்வமான பெரியசாமி காமாட்சி அம்மனின் ஆலையம் கூட புளிய மரங்கள் நிறைந்த இடத்தில் இருக்கிறது. அந்த ஊரின் பெயரே புளியஞ்சோலை. கொல்லிமலையின் அடிவாரம்.


http://sagotharan.wordpress.com/

ராம்ஜி_யாஹூ சொன்னது…

In Karunkulam (Tirunelveli-srivaikundam route-20km from Tirunelveli) temple too Urangaa puli tree is there.

T.R.V.Anand சொன்னது…

i am from kuttam
This information is 100% true.godess in the temple was very power.she will give whatever we ask.more insident is their for further contuct
***vigneshanand007@Gmail.com******
thank u for the publisher ,who publish in the website
thank u a lot

T.R.V.Anand சொன்னது…

i am from kuttam
This information is 100% true.godess in the temple was very power.she will give whatever we ask.more insident is their for further contuct *****vigneshanand007@Gmail.com*****
thank u for the publisher ,who publish in the website
thank u a lot