செவ்வாய், 12 ஜனவரி, 2010

சுகப்பிரசவத்திற்கு தியானம் செய்யுங்கள்

தியானத்தின் அவசியம் இப்போது உலகம் முழுவதும் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனப்பக்குவம் பெற்ற எல்லோருமே தியானம் செய்யலாம். கர்ப்பிணிகள் தியானம் செய்தால், குழந்தை பிறப்பு பற்றிய பயம் விலகும். பதற்றம் குறையும. மனநெருக்கடி விட்டுவிலகும். கத்தியின்றி, அதனால் ஏற்படும் ரத்தமின்றி சுகப்பிரசவம் நிகழும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெளிநாடுகளில், பிரசவிக்க தயாராக இருக்கும் பெண்களை தண்ணீருக்குள் அமரச் செய்து தியானச் சிகிச்சை அளிக்கிறார்கள். இதை மெடிடேசன் தெரபி என்கிறார்கள்.

இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் கர்ப்பிணிப் பெண்ணை, தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்குள் சாய்ந்து படுக்குமாறு செய்கிறார்கள். தொடர்ந்து, அந்த பெண்ணை, கண்ணை மூடும்படி கூறிவிட்டு, அவருக்கு லேசாக மசாஜ் செய்கிறார்கள்.

இதுபற்றி அந்த டாக்டர்கள் கூறும்போது, "இந்த மெடிடேசன் தெரபியால் கர்ப்பிணி பெண்களின், பிரசவம் பற்றிய பயம் விலகுகிறது. அந்த பிரசவத்தை சுகமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறார்கள். மேலும், அதுபற்றிய டென்ஷனும் விலகிவிடுகிறது. அதனால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்புகள் மிகவும் அதிகரிக்கிறது. ஏன்... 100 சதவீதம் சுகப்பிரசவம் நிகழும் என்றுகூட கூறலாம்" என்கின்றனர்.

நம் நாட்டில் இந்த அளவுக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கான தியானம் பிரபலம் ஆகாவிட்டாலும்கூட, சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே தியானம் செய்யலாம். தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. அந்த வாய்ப்பு இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்வதிலும் தவறில்லை.

மன அமைதி தரும் இடமாக இருந்தாலே, அந்த இடத்தை தியானம் செய்ய தேர்வு செய்யலாம். ஏன்... கடற்கரையில் அமர்ந்து, இயற்கையான சுத்தமான காற்றை சுவாசித்தபடி தியானம் செய்வதுகூட மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.

அதுசரி... தியானம் செய்வது எப்படி இன்று கேட்கிறீர்களா?

அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்....

தியானம் செய்யுங்கள்... சூப்பர் ஸ்டார் ஆகுங்கள்..

Share:

0 கருத்துகள்: