ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அன்னை பற்றி வைரமுத்து


யிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத்தேவன் பெத்த
பொன்னே! குலமகனே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கதகதன்னு களி(க்)கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே...

தொண்டையில அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்கிதம்மா...

- கவிப்பேரரசு வைரமுத்து.

வைரமுத்து, தனது அன்னை பற்றி எழுதிய இந்த கவிதை, அவரது கொஞ்சம் தேநீர் நிறைய வானம் என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
Share:

0 கருத்துகள்: