வியாழன், 25 பிப்ரவரி, 2010

கேழ்வரகு இனிப்பு அடை


தேவையானவை :

கேழ்வரகு (ராகி) மாவு   - ஒரு கப்
வெல்லம்                            -  1/2 கப்
துருவிய தேங்காய்         - 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி,
நல்லெண்ணெய்              - தேவையான அளவு

செய்முறை :


1. வெல்லத்தை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கரண்டி அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

2. வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, கேழ்வரகு மாவு ஆகியவற்றை போட்டு கட்டிப்படாமல் கிளறிவிடவும்.

3. மாவு உதிரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

4. சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக மாவை உருட்டுங்கள். வாழையிலையில் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை மெல்லிய வடைகள் போன்று தட்டி, சூடான தோசைக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கேழ்வரகு இனிப்பு அடை தயார்.

பின் குறிப்பு : இந்த வகை அடை செய்யும்போது, கேழ்வரகு மாவு நன்கு வேக வேண்டும். அதனால், சிறு தீயில் அதை நன்றாக வேகவிடுங்கள்.

காரடையான்நோன்பு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள், அடை செய்து நைவேத்தியம் செய்வார்கள்.
Share:

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஒரு குருப்பாதான் அலையிறாங்க போல

prabhadamu சொன்னது…

சமையல் குறிப்பு எல்லாமே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் நண்பரே.