
எனக்கு
ரொம்ப பிடிக்கும்
அன்றலர்ந்த தாமரையாய்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கும்
அந்த
வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்...
அதை காண
கண்கள் கோடி வேண்டும்...
வரம் அருள மாட்டாரா
அந்த பிரம்மன்?
எத்தனிக்கும்
எந்தன் ஆவல்களுக்கு
ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்!
உந்தன்
பொற்பாதத்தில் சிணுங்கும்
கொலுசொலியின் கீதத்தில்
என்னை...